Tuesday 10 December 2019

my books available at Amazon

Description
இந்த புத்தகம் ஆனது நான்குமாதங்கள் செய்யவேண்டிய நடைமுறைகளை தொகுத்து உள்ளது. நீங்கள் இந்த் வசிய கலையை அடிப்படை விதிகளை இந்த புத்தகத்தின் மூலமாக எளிதாகவும் விரிவாகவும் கற்று கொள்ளலாம். காரணம் பண்டைய நடைமுறைகளில் உள்ள ரகசிய முறைகளை பற்றி மக்களுக்கு நிறைய உண்மைகள் தெரியாமலேயே போய்விட்டது அதன் காரணமாக மக்களிடத்தில் தந்த்ரா என்பது எதோ ஒரு செய்யக்கூடாத விசயமாக மக்களின் மனதில் பதிந்து விட்டது. ஆனால் உண்மைலேயில் தந்திரம் என்றால் அது நடைமுறையாகள் அல்லது பயிற்சிகள். அதாவது ஒரு விசயத்தை கற்று கொள்ளுவதற்கான வழிமுறைகள் என்று பொருள். ஆனால் மேற்கத்திய கலாச்சாரம் ஆனது எப்பொழுது இவைகளை பற்றி தெரிந்து கொண்டதோ அப்பொழுது இதன் உள்ளார்ந்த விசயங்களை பற்றிய உண்மைகள் தெரிந்து கொள்ளாமலேயே, அவர்கள் இதனை தவறான ஒன்றாக புரிந்து கொண்டு விட்டதனால், அவர்கள் இதனை பற்றி தவறாக உலகம் முழுவதும் பரவ செய்து விட்டார்கள்.
ஆனால் உண்மையில் தந்த்ரா என்பதே ஒருமனிதனின் உள்ளுணர்வின் செயல்பாடுகளை பற்றி ஆராய்ந்து அதன்மூலமாக அவன் மேலும் மேலும் உயரிய நிலையை அடைவதற்கான வழிமுறைகளை சொல்லுவது.
ஆனால் மேற்கத்திய மக்கள் இத்தனையும் இதன் முறைகளையும் பார்த்தவுடனே அவர்களின் குறுகிய பார்வைகளை கொண்டு, இதனை தவறான ஒன்றாக,
அதாவது பாலியல் கல்வியை பாதிப்பதாக நினைத்து கொண்டு அதனை கொண்டு அதில் உள்ள சூட்சமங்களை புரிந்து கொள்ளாமலேயே அது பாலியல் கல்வியை மட்டுமே கற்று தருகின்றது என்று முடிவு செய்து அதனை முழுமையாகவே உணர்ந்து கொள்ளாமல் நிறைய புத்தகங்களையும் மற்றும் மொழிபெயர்புகளையும் உருவாக்கி அதன் புனித தன்மையான மனிதனின் தன்மையில் இருந்து உயர் நிலை அடைவதற்கான வழிகளை தெரிந்து கொள்ளாமலேயே விட்டு விட்டார்கள். அது தான் அவர்களின் மூட தனத்தை உலகிற்கு பறைசாற்று கின்றது. அதே போன்று தான் இந்த வசிய கலையின் தன்மையும்.
காரணம் இந்த வசிய கலையானது மிக முக்கியமாக அன்றய ஞானிகள் எதிர்காலத்தை உணர்வதற்கும், எதிரில் உள்ளவர்களின் மனதினை அறிந்து அவர்களின் குறைகளை களைவதற்கு பயன்படுத்தினார்கள். மேலும் இந்த வசிய கலையானது மிக முக்கியமாக மனித உடலியல் நோய்களையும் உள நோய்களையும் களைவதற்காக தான் பயன் படுத்தினார்கள்.
மேலும் அதனை கொண்டு அவர்களின் உயர்நிலையை அடைவதற்கும் பயன் படுத்தினார்கள்.
மேலும் அவர்களின் நோக்கமே மனிதர்கள் இந்த வசிய கலையை பயன்படுத்தி மனிதர்களின் எண்ணங்களில் ஏற்படுகின்ற துயரங்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தினார்கள்.
மேலும் நான் இந்த ரகசிய முறைகளை எளிமையாகவும் மனிதர்கள் உணரும் விதத்திலும், அவர்கள் இதனை பயிற்சி செய்வதன் மூலமாக, அவர்களின் சுயம் ஆனது தெளிவாக தெரிந்து கொள்வதற்கும், நடைமுறைகளை சொல்லி இருக்கின்றேன்.
காரணம் நீங்கள் இதனை பயிற்சி செய்யும் பொழுதே உங்களுடைய மனதில் உறுதியும். உங்களின் எண்ணங்களில் தெளிவும் ஏற்பட ஆரம்பிக்கும்.
அதனை கொண்டு உங்களின் வாழ்க்கையின் வெற்றி பாதைகளை நீங்களே உயர்த்திக்கொள்ள முடியும்.
காரணம் நாம் தோல்வி அடைவதற்கு காரணமே நம்முடைய தெளிவற்ற சிந்தனைகள் தான், எப்பொழுது நாம் தெளிவான சிந்தனை கொள்கின்றோமோ அப்பொழுது தான் நாம் என்ன தவறுகளை செய்கின்றோம் அதனால் நம்முடைய வாழ்க்கை நடைமுறைகள் எப்படி எல்லாம் மாறி இருக்கின்றது அதனை எப்படி எல்லாம் செயல் படுத்தினால் அதனை நம்மால் மாற்றி அமைத்து கொள்ள முடியும் என்பதனை நீங்களே புரிந்து கொள்வீர்கள். மேலும் நான் இதில் அடிப்படை வழிமுறைகளை தான் சொல்லி இருக்கின்றேன், இதனுடைய அடுத்த கட்ட பயிற்சிகளை என்னுடைய அடுத்து வரும் புத்தங்கங்களில் உங்களுக்கு வழங்குகின்றேன்.
முதலில் நீங்கள் உங்களுடைய அடிமட்ட பயிற்சிகளை சரியாக செய்து வந்தால் அதன் பிறகு தான், நீங்கள் அடுத்த கட்ட பயிற்சிகளை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அதனால் முடிந்தவரையில், இந்த பயிற்சிகளை தெளிவாக புரிந்துகொண்டு பயிற்சிகளை செய்யுங்கள். அது போதும்