Wednesday 24 October 2018

Jagadeesh Krishnan psychologist and International Author

கயிலை சென்றதால் நீ கையிலை மணியும் அல்ல

சித்தரை வழிபடுவதால் நீ சித்தனும் அல்ல

காளி வேஷம் போடுவதால் நீ காளியும் இல்லை

கருவரைக்கு செல்வதால் நீ புனிதனும் இல்லை

வேதங்கள் ஓதுவதாலும் புத்தகங்களை ஆராய்வதாலும் நீ ஞானியும் அல்ல

சுடுகாட்டில் இருப்பதால் நீ அகோாியும் இல்லை

ருத்ராட்சங்கள் அணிவதால் நீ அடியாரும் இல்லை.

காவி உடுத்தியதால் நீ கடவுளும் இல்லை

சடை முடி வளா்ந்ததால் நீ முனிவரும் இல்லை

நீ மனிதன் அதை முதலில் உணா்ந்து கொள் . உன்னிடம் உள்ள கோபம் தாபம் தலைக்கணம் பொறாமை பணஆசை பொருள்ஆசை காமஆசை தலைமை ஆசை இவை அனைத்திலும் ஒன்று உன்னிடம் இருந்தாலும் மேற்கூறிய
எதற்கும் நீ தகுதியற்றவனாகிறாய் .

இவை அனைத்தும் உன்னிடம் இல்லாமல் இருப்பாயாகில் மேற்கூறிய அனைத்தின் மொத்த உருவமே நீயாகதான் பாா்க்கபடுவாய் .

ஆகவே வேஷங்களில் கடவுளை காணாதே உன்னுள் இருக்கும் கடவுள் பண்பை தட்டி எழுப்பு . அதை நா்த்தனம் ஆடவை. பின் அம்பலத்தை கண்டு அசைவில்லா மல் இறையோடு ஒன்றினைந்து கொள்.

சித்தா்கள் போற்றி
By
K. Jagadeesh

No comments:

Post a Comment