Tuesday 21 January 2020

திராவிடம் ஆரியம் தொடர்பான புத்தகங்கள் எல்லாம் கடந்த 150 வருடங்களுக்குள் உள்ளனவாகவே உள்ளது. இவைகள் எல்லாம் கட்டுகதைகள், இடைசெருகல்கள், உண்மை திரிப்புகள் தானே?

இந்த திராவிடம் ஆரியம் என்கின்ற சித்தாந்தங்கள் நீங்கள் சொல்வதை விட குறைவான காலத்தில் தான் வளர்ச்சி அடைந்தது. இதற்கு காரணம் ஈவேரா ராமசாமி நாயக்கர். அவருக்கு முன்பு எல்லாம் இதனை போன்ற பாகுபாடுகள் இல்லை, காரணம் அனைவரும் ஒற்றுமையுடன் தான் இருந்தார்கள். அவர்களுக்குள் சில பல பாகுபாடுகள் இருந்தது உண்மைதான் ஆனால், இது ஒருசாராரை கேவலப்படுத்தும் விதமாக முன்னெடுக்க பட்டது இவனுடைய காலத்தில் தான். அதற்கு காரணம் இவனை ஒரு காங்கிரஸ் மாநாட்டில் சில பிரிவினர் தனியாக உணவு உண்பதற்கு அனுப்பினார்கள் என்கின்ற கோபம் தான் இந்த ஆரிய எதிர்ப்பு உயர்வாவதற்கு மிக முகிய காரணம். அதனை கொண்டே இவனும் இவனை சார்ந்தவர்களும் அதனை மிக பெரிய அளவில் உருவாக்கி இதனை அதன் மூலமாக நாட்டின் ஆட்சியை பிடிக்கின்ற அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள். அப்பொழுதில் இருந்து தான் இவைகள் பெரிய பிரச்சனைகளாக தமிழ் நாட்டில் மட்டும் உருவாகி நிற்கின்றது. மற்றபடி வேறு ஒன்றுமே இல்லை இது ஒரு காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு. எப்படி காந்தி தென் ஆப்பிரிக்காவில் நிற பாகுபாடு செய்ததனால் அவமானம் அடைந்து அதற்காக அவர்களை எதிர்த்தானோ அதேபோன்றது தான் இதுவும். இதில் எந்த விதமான வேறுபாடும் இருவருக்குமே இல்லை. காரணம் தங்களுடைய ஆணவத்திற்கு எப்பொழுது அடி விழுகிறதோ அப்பொழுது எந்த ஒரு மனிதனும் செய்ய கூடிய எதிர்வினை தான் இவைகள் அனைத்துமே. அவ்வளவு தான். இந்த எதிர்வினையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அதனை ஒரு புரட்சி என்று சொல்லுகின்றார்கள், இல்லை என்றால் பயித்தியக்காரன் என்று சொல்லுவார்கள். அவ்வளவு தான். உண்மையிலேயே இவைகள் புரட்சிகளும் அல்ல வேறு எதுவும் அல்ல இவைகள் அனைத்துமே தனிமனிதனின் காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே. மக்களுக்கு எப்பொழுதுமே நமையான எண்ணங்கள் அவ்வளவு விரைவாக போய் சேர்வது இல்லை, தீய எண்ணங்கள் தான் மிக மிக விரைவாக சென்று சேர்கின்றன. ஒருபுத்தன் ஞானம் அடைந்தாள் அது மிகப்பெரிய புரட்சி மனிதகுலத்திற்கே அது ஒரு மிக பெரிய வரம் ஆனால் அது அவ்வளவு விரைவாக மக்களை போய் சேராது, காரணம் மக்களின் விழிப்புணர்ச்சி அற்ற தன்மை மட்டுமே, அதனை புரிந்துகொள்வதற்கு சிறிதளவாவது தங்களுடைய சுயத்தை பற்றிய சிந்தனைகள் இருக்க வேண்டும், அறியாமையில் இருப்பவர்கள் எப்படி சுயத்தை அறிய முடியும், வேண்டும் என்றால் அவர்கள் அவனை கடவுளாக மாற்றி தனியாக பிரித்து விடுவார்கள் அல்லது அவனை பயித்திய காரணம் என்று சொல்லி கேலிசெய்வார்கள். உதாரணத்திற்கு புத்த தன்மையில் இருந்து தான் புத்து என்கின்ற வார்த்தை உருவானது அதற்கு பொருள் பயித்தியக்காரன். அப்படி பட்ட ஞானம் அடைந்த ஒருவனையே இந்த அறியாமையில் இருப்பவர்கள் கேலிசெய்து இருக்கின்றார்கள். அப்பறம் எப்படி அவர்கள் தங்களுடைய சுயத்தை உணர முடியும். மேலும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் சுயத்தை உணராத அறிவிலிகள் தான் அதனால் தான் அவர்களின் தலைவர்களாக பெரிய அறிவிலிகள் இருக்கின்றார்கள். அதனை போன்ற ஒருவன் தான் இவனையும் இவனின் கொள்கைகளும். அவ்வளவு தான். இதில் என்ன ஆச்சர்யம் இருக்க போகின்றது. இதற்கு இவன் மட்டும் காரணம் அழல் கார்டு வேல் என்கின்ற ஒரு ஆங்கிலேயனும் காரணம் அவனை தான் இந்தியாவில் உள்ளவர்களை முதன் முதலாக திராவிடர்கள் மற்றும் ஆரியர்கள் என்று தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிட்டு இருப்பான். அவனை பின்பற்றி தான் இவர்களும் இதனை தமிழ் நாட்டில் பரப்பினார்கள். அவ்வளவு தான். அதனால் தான் உங்களுக்கு இந்த புத்தகங்கள் ஒரு நூறு வருடங்களுக்கு உள்ளக மட்டுமே கிடைக்கும். அதற்கு முன்பு இதனை போன்ற ஒரு பாகுபாடு எப்பொழுதுமே எங்கும் பயன்பாட்டில் இல்லை.

No comments:

Post a Comment