Tuesday 21 January 2020

மூன்று சதவீத ஆரிய இனம் 97% பெரும்பான்மையினரை சதி அல்லது சூழ்ச்சி வலையில் சிக்க வைத்தது, இன்னும் சிக்கிக் கொண்டிருப்பது எவ்வாறு? எப்படி சாத்தியமாயிற்று?

அசல் கேள்வி: மூன்று சதவீத ஆரிய இனம் 97% பெரும்பான்மையினரை சதி அல்லது சூழ்ச்சி வலையில் சிக்க வைத்தது, இன்னும் சிக்கிக் கொண்டிருப்பது எவ்வாறு, எப்படி சாத்தியமாயிற்று?
அது என்ன ஆரியா இனம், அப்படி ஒருவர் இல்லவே இல்லை, அனைவருமே மனித இனம்தான், இதில் நீங்களாகவே வகுத்து கொண்டது தான் இந்த இனங்கள் எல்லாமே. எப்பொழுதுமே மனித இனத்திற்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கின்றது, மற்றவர்கள் தங்களைவிட ஏதாவது ஒரு விதத்தில் உயர்ந்து விட்டால், ஒன்று அவர்களை மிக மிக உயர்த்தி பேசுவது, அல்லது மிக மிக தாழ்த்தி பேசுவது, அவர்கள் நமக்கு உதவி செய்தார்கள் என்றால் அவர்கள் உயர்ந்த குலத்தில் பிறந்து இருப்பார்கள் என்றும், கெடுதல் செய்தார்கள் என்றால் அவர்கள் தாழ்ந்த குலத்தில் பிறந்து இருப்பார்கள் என்று பேசுவது. ஆனால் உண்மையிலேயே இந்த உலகத்தில் பிறந்த எவனுமே உயர்ந்தவனும் இல்லை, தாழ்த்தவனும் இல்லை, அவர்கள் அனைவருமே ஒரு தாயின் கருவில் இருந்து தான் உதித்தவர்கள், வேண்டும் என்றால், அவர்களின் நிறங்கள் மாறலாம் மனங்கள் மாறலாம், செயல்கள் மாறலாம், மற்றபடி அணிஅவருமே ஒரே மாதிரியாக தான் பிறவி எடுத்தவர்கள். இதில் என்ன எண்ணற்ற தாழ்வு. அப்புறம் இது போன்ற எண்ணற்ற தாழ்வுகளே, நம்முடைய அறிவு வளர்ச்சியை தடுக்க கூடிய காரணிகளாகும், இப்பொழுது நாம் மற்றவர்களை விட நம்மை தாழ்த்தி கொள்கிறோமோ, நம்முடைய அறிவானது நன்றாக வேலை செய்ய வில்லை என்று பொருள். இயற்கையை பொறுத்தவரையில் மனிதகுலம் என்பதே கணக்கில் வருகின்றதா, என்பதே இன்னமும் சரியாக தெரிய வில்லை, காரணம், இந்த உலகில் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள கூடிய உயிரினம் இந்த உலகில் உள்ள உயிரினங்களை கணக்கில் கொண்டு பார்த்தல், அவர்களுக்கே கணக்கில் எடுத்து கொள்ள கூடியதாக இல்லவே இல்லை. இந்த உலகத்தில் உயிரினம் ஒரு நூறு சதவிகிதம் என்று எடுத்து கொண்டால் அதில் மனித இனம் .௦௦௦௦௦௧ (.000001) அளவிற்கு தான் இருக்கின்றது, இதில் இவர்கள் தான் உலகையே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு இருப்பது போன்று அலப்பறைகள் வேறு, அதிகபட்சமாக உலகத்தில் உயிரினங்கள் வாழ்கின்ற கடலில் இருக்கின்ற உயிர் இனங்களே தாங்கள் தான், இந்த உலகத்தை கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு இருந்தாலும் அவைகள் எப்பொழுதுமே அதனை பற்றி ஒரே ஒரு வினாடிகூட பேசியதே இல்லை, ஆனால் உலகில் கணக்கிலே வராத உயிரினமான மனிதர்கள் ஏன் இப்படி எல்லாம் அலப்பறை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதனால் நான் உங்களுக்கு ஒன்றே ஒன்றை சொல்லி கொள்கிறேன் தயவு செய்து எப்படி சண்டை போட்டு கொண்டே இருந்தீர்கள் என்றால் ஒருநாள் இல்லை, கடலில் இருக்கின்ற உயிரினங்கள் உங்களை வந்த நசுக்கி விட்டு போய்விடும். அதனால் முடிந்த வரையில் எந்த விதமான தொந்தரவும் செய்யாமல் நீங்க உங்களுக்குள் அமைதியாக இருந்தால் உங்களுக்கு நல்லது அவ்வளவுதான் நான் சொல்வது.
அது என்ன மூன்று சதவிகிதம், ஆரியர்கள் மட்டும், நீங்கள் அனைவரும் தொன்னூற்று ஏழு சதவிகிதமா, என்ன கணக்கு இது, இந்த கணக்கு கூட சரியாக போடா தெரிய வில்லை, இந்த உலகத்தை கட்டு படுத்தி கொண்டு இருப்பது ஆரியர்களோ அல்லது அவர்களின் சித்தாந்தங்களோ அல்ல, உங்களின் அறியாமை, உங்களுக்குள் இருக்கின்ற முட்டாள் தனங்கள், மேலும் உங்களுக்குள் இருக்கின்ற ஆணவம், உங்களுக்குள் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மை, இதனை எப்பொழுதாவது சிறிதளவாவது சுய சிந்தனையுடன் சிந்தித்து இவைகளை களைவது எப்படி என்றாவது என்றைக்காவது முயற்சி செய்து இருக்கின்றீர்களா. அல்லது சிந்தித்தாவது இருக்கின்றீர்களா இது நமக்குளே இருக்கிறது என்றாவது.இல்லவே இல்லை அப்படி என்றால் உங்களை அடிமைப்படுத்துவதற்கு ஆரியர்கள் என்ன ஒரு நாயே போதும். உங்களை பார்த்து குறைத்தாலே நீங்கள் அதற்கு அடிமைகளாக சேவகம் செய்வீர்கள். இதில் அவர்களை எதற்கு வம்புக்கு இழுக்கிறீர்கள். உங்களுக்கு யாராவது வேண்டும், அவன் நம்மை எப்பொழுதுமே திருப்பி தாக்கவே மாட்டேன் என்று தெரிந்தால் போதும், அவனுக்கு உங்களால் முடிந்த வரையில் உபத்திரவம் செய்து கொண்டே இருப்பீர்கள், இதற்கு பெயர் தான் அறியாமை. உண்மையில் உங்களை ஆரியர்கள் என்கின்ற யாருமே கட்டு படுத்தவில்லை, நீங்களாகவேதான் உங்களுடைய சுயத்தை அறியாமல் இருந்து கொண்டு எவன் எவனையோ குறை சொல்லிக்கொண்டே இருப்பதே வேலையாகி விட்டது.யாரோ நம்மை அடிமையாக வைத்து கொண்டு இருக்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் இப்படி இருக்கிறார்கள் என்று வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டு உங்களின் முட்டாள் தனத்திற்கு ஒரு முகமூடி போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கலாம் அவ்வ்ளவு தான். உண்மையிலேயே நீங்கள் சொல்லுகின்ற ஆரியர்கள் என்கின்ற ஒரு இனமே தனியாக இல்லவே இல்லை இவை அனைத்துமே உங்களின் கற்பனை கதைகள் தான். மேலும் ஒன்றை சரியாக புரிந்து கொள்ளுங்கள். உங்களை இப்படி திசை திருப்பி குளிர் காய்ந்து கொண்டு இருப்பது, இந்த மத விபச்சாரகர்களும், மதம் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற மற்றொரு விபச்சார கூட்டமும், அப்புறம் அரசியல் என்று சொல்லிக்கொண்டு சுற்றி கொண்டிருக்கின்ற இன்னொரு விபச்சாரர்களின் கூட்டமும், இவர்களுக்கு விளம்பரம் செய்வதன் மூலமாக செயல் பட்டு கொண்டு இருக்கின்ற மீடியா என்கின்ற இன்னொரு விபச்சார கூட்டமும், மற்றும் பல பல விபச்சாரகர்களின் கூட்டங்கள் உங்களை சிந்திக்க விடாமல் செய்து உங்களின் சுயத்தை நீங்கள் உணராமலேயே செய்து கொண்டு இருக்கின்றது, அவைகளில் இருந்து உன்னுடைய சுயத்தை முதலில் நீ காப்பாற்றி கொள் அப்புறம் அனைத்துமே உனக்கே தெளிவாக தெரிய வரும், அது வரையில் இப்படி தான் எவன் மீதாவது பழியை போட்டுக்கொண்டே திரிந்து கொண்டு இருப்பாய்.

No comments:

Post a Comment